கவலையும் கடமையுணர்வும்
கவலை வேறு, பொறுப்புணர்ச்சி வேறு. கவலைப்படக் கூடாது என்பதற்காக, வந்து விட்ட சிக்கலை மறந்து விடலாகாது. சிக்கலை ஏற்கத் தான் வேண்டும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆராயவும் வேண்டும். கடமையுணர்வு வந்தால்தான் சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய அளவுக்குத் துணிவும் தெளிவும் வரும். கடமையைத் தெரிந்து செயலாற்றும்போது கவலை ஏற்படாது.
மகன் 90 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அவன் 50 மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறான். அதை மாற்றுவதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென்று கடமையைச் செய்ய வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
அகத்தாய்வு நான்காம் நிலைப் பயிற்சி, Dec 10 & 11, 2011 VMSKY சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment