முழுக்கல்வி
இயற்கை தத்துவ அறிவு, ஒழுக்கப் பழக்கங்கள் ஆகிய இரண்டும் மனிதகுலத்துக்கு வேண்டும். ஆனால், இன்றைய சமுதாயத்தில் எழுத்தறிவு இருக்கிறது. தொழிலறிவு இருக்கிறது. 'செயலுக்கு விளைவு' என்ற இயற்கைத் தத்துவமும், 'ஒவ்வொரு பொருளும் எப்படித் தோன்றி இயங்கிக் கொண்டு இருக்கின்றது? நாம் ஒவ்வொரு பொருளுடனும் எப்படித் தொடர்பு கொள்ளுவது?' என்ற தத்துவ ஞானமும், அதற்கு ஏற்றவாறு ஒருவரையொருவர் உணர்ந்தும், மதித்தும் வாழ்க்கையில் அளவு முறையோடு வாழ வேண்டிய ஒழுக்கப் பழக்கங்களும் கல்வியில் உணர்த்தப் படுவதில்லை. ஒழுக்கப் பழக்கங்களும் சேர்ந்தால் தான் அது முழுக்கல்வியாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment