சன்னியாசம்
மனித உடலானது சமுதாய மக்களுடைய கூட்டுறவால், உணவால் உருவாக்கப்பட்டு, அவர்களால் காக்கப் பட்டு, அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து எழக் கூடிய செயல்விளைவுகள், நல்ல விளைவுகள் எல்லாம் சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டுமென்ற அளவில் சமுதாயத்திற்கு தன்னை ஒப்புவித்து(surrender), தான் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, என்னும் முழுமையாக விட்டுக் கொடுக்கும் (complete surrender) தொண்டு நிலை தான் சன்னியாசம் எனப்படும். இதை அடைவதற்கு வீட்டை விட்டு வர வேண்டியதோ, குழந்தைகளை விட்டு விட்டு வர வேண்டியதோ தேவையே இல்லை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment