விளக்கம்
இருட்டைக் காண வேண்டுமென்று விளக்கை எடுத்துக் கொண்டு போகும் வரை இருட்டைப் பார்க்க முடியாது. அந்த விளக்கை அணைத்து விட்டுப் போனால் தான் இருட்டைப் பார்க்க முடியும்.
அதுபோல் உள்ளத்தில் களங்கங்கள், வெவ்வேறு விதமான பயிற்சிகளால் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட தேவையில்லாத பழக்க வழக்கங்கள், இவைகளையெல்லாம் அப்படியே வைத்துக்கொண்டு கடவுளைத் தேடினால் முடியாது. மறைத்துக் கொண்டிருக்கக் கூடிய களங்கத்தை நீக்கி விட்டால் மீதமாக இருப்பது எதுவோ, அதுவேதான் மெய்ப்பொருள். களங்கத்தை நீக்குவதற்கு என்ன உண்டோ அது தான் ஒழுக்கம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
மார்ச் 04, 2012 ஞாயிறு காலை 9.00 மணி முதல்
அகத்தாய்வு முதல் நிலைப் பயிற்சி @ VMSKY சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment