கோபம்
நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை எனில் பிறர் மீது எப்படி ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.
நாம் அமைதியாக இருக்கும் போதெல்லாம் 'நான் கோபத்தை ஒழித்து விடுவேன்' என்ற திடசங்கல்பத்தைப் பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால் முதலில் சில சமயங்கள் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வருமானம் கிடைக்கும்போது சேமித்து வைக்கும் பணம் தேவையான போது உதவியாவதைப் போல் அமைதியாக இருக்கும் போது கொள்ளும் உறுதி, கோபம் எழும் போது வாழ்வில் ஒரு புதிய திருப்பம் உண்டாக முன் வந்து நிற்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
மார்ச் 4, 2012 Sunday காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
அகத்தாய்வு முதல் நிலைப் பயிற்சி @ VMSKY
No comments:
Post a Comment