வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 12 March 2012

எண்ணங்கள்

எண்ணங்கள்

பற்று, பாசம் இவைகளின் மூலமாக அதிகமான எண்ணங்களை இரவு பகலாக நாம் எண்ணிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு எண்ணத்திற்கும் சில செல்கள் இயங்க ஆரம்பிக்கும். நமக்குத் தூக்கம் வரக்கூடிய நேரத்திலும் நாம் இயக்கிவிட்ட எண்ண ஓட்டம் நிற்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். இதனால் தூக்கமும் வராது. சீவகாந்த சக்தி அதிகம் செலவாகி உடல்நலம் குன்ற வாய்ப்பு ஏற்படும். அதிகமாக எண்ணி எண்ணி மூளையிலுள்ள செல்களுக்கு அதிக வேலை கெடுத்து விட்டால் உடலுக்கு ஓர் இறுக்கம் வந்து விடும். அதைச் சரிப்படுத்த அதற்கென தியானப் பயிற்சி செய்தாக வேண்டும்.

கோபம், வெறுப்பு, சாபம், வஞ்சம் போன்ற எண்ணங்கள் மனதில் இருந்தால் நம்முடைய உடல்நலமும் மனநலமும்
பாதிக்கப்படும். அன்பு, பண்பு, இனிமை, வாழ்த்து இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்கு வேண்டிய நல்ல எண்ணங்கள்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment