மரணம்
மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போது தான் அது வாழ்வு. உயிரின் இயக்கத்தால் தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையெனில் தொடரியக்கம் சிதைந்து ஒவ்வொன்றும் தனித்தனியே இயக்கத்தை நடத்திக் கொள்ளும்.
உதாரணமாக, ஒரு கம்பெனி liquidate செய்யப்பட்டால், கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள், ஆனால் தனித்தியங்குகிறார்கள்.
அதே போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து, தனித்தியங்குகின்றன. அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment