அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி,
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி;
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு,
நெறியோடு வாழ்க வென அழுத்தமான
நினைவலைகளைப் பரப்பி தவம் செய்கின்றேன்
பொறி புலன்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment