நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப் பொருளால் நிறைந்த உள்ளம்,
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்; அறிவு ஓங்கி
அதுவேதான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றைச்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றைச்
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment