இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்திந் நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன் முனைப்பு காணும் தெய்வம்".
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment