வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 27 June 2013

விதி மதி இரு நிலை இயக்கம் :

தப்புக் கணக்கு :

தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி; ஒழுங்கமைப்பிற்கொத்தபடி
அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்.

                              - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 
***** ***** ***** ***** ***** *****

இயற்கையின் பேராற்றல் :

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
பெயர்த்து இடம் மாற்றி வைப்பான், பிய்த்தெறிவான், அருள்வான்;
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்?

                             - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

***** ***** ***** ***** ***** *****

விதி மதி இரு நிலை இயக்கம் :

ஓர் கல்லை நீ எடுத்துத் தூர வீச
உண்டாகும் இருவிதமாம் இயக்கம் அங்கே;
ஈர்க்கிறது விதி கல்லை பூமிநோக்கி;
எதிர்த்தோடும் அது மதியின் ஆற்றலாலே,
பார்க்கின்றோம் அது செல்லும் வேகம் குன்ற,
படிப்படியாய் கீழ் இறங்கி பூமி சேர,
போர்க்கோலம் போல், விதியும், மதியும் அங்கே
புரிகின்ற போட்டிகளின் முடிவைப் பாரீர்.

                               - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 ***** ***** ***** ***** ***** *****

No comments:

Post a Comment