 | வேதாத்திரிய சிந்தனைகள் : - அகத்தவ பெருமை : - அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம் ; அகத்தவத்தால் அறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம் ; அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம் ; அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம். அகத்தவத்தால் வீடுணர்ந்து அமைதி பெற்று இன்புறலாம் ; - - வேதாத்திரி மகரிஷி அன்பர்களே, மனவளக் கலையில் சொல்லிக்கொடுக்கும் குண்டலினி தவம் பயின்று தொடர்ந்து பழகி வந்தால் ஐம்புலன்கள் மனதின் கட்டுப்பாட்டில் வரும். ஆறு தீய குணங்களும் நம்மை விட்டு விலகும் வல்லமை பெறலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். எல்லா உயிர்களைய்ம் நேசிக்கும் பண்பு வரும். அவைகளின் நட்பு கிடைக்கும். அனைத்திற்கும் மேலாக பிறவியின் நோக்கமாகிய வீடுபேறு பெற்று இன்பமும் அமைதியும் பெறலாம். தன்னை அறியலாம். தனது மூலம் அறியலாம். வாழ்க வளமுடன். |
No comments:
Post a Comment