வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 13 March 2012

நல்லெண்ணம்

நல்லெண்ணம்

நாம் ஒருவரை வெறுக்கிறோம் என்று வைத்துக் கொண்டால் அதன் வெறுப்புணர்ச்சி, மனநலத்திற்குப் பொருத்தமற்றதாக அமையும். அது சீவகாந்தத்தின் மூலமாக உடலை விஷமாக்கக் கூடும். ஒருவர் கெட வேண்டும் என்று நினைக்கும் போது அந்த எண்ணத்தினாலே முதலில் நாமே கெட்டு விடுகிறோம். அது கருமையத்தில்
பதிவும் ஆகிவிடுகிறது. பல தடவை ஒருவர் கெட வேண்டும் என்று நினைக்கும் பொழுது நமது சீவகாந்த அலை களங்கப்படுகிறது. நம் நினைவினாலே தான் நாம் கெட்டுப் போகின்றோம்.

இந்தக் கெட்ட எண்ணம், தன்னைக்கெடுத்து வெளியிலும் பாய்கிறது. ஆகவே இது முரண்பாடான எண்ணம், பொருந்தாத எண்ணம், வாழ்வைச் சீரழிக்கும் எண்ணம்.

எனவே தான் எண்ணத்தைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களையே எண்ணுதல் வேண்டும். தீய எண்ணங்களைத் தவிர்க்க முயல வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment