வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 21 March 2012

ஏமாற்றம் தவிர்த்தல்

ஏமாற்றம் தவிர்த்தல்

ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கும் ஒரு மனநிலை. ஏமாற்றம் தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம், இயற்கையாலும் வரலாம். பேராசை, அறியாமை, தப்புக்கணக்கு, விழிப்பின்மை, இயற்கைச்சீற்றம் ஆகிய ஆறின் வகையில் ஏமாற்றங்கள் எழுகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கு ஏற்ப அதிர்ச்சியும் துன்பமும் விளையும்.

எதிர்பார்த்தல், பிறர் செயலில் குறுக்கிடல் என்ற இரண்டினைத் தவிர்த்து, தன் கடமைகளை விளைவறிந்த விளைப்போடு செய்யும் வாழ்க்கை முறையே ஏமாற்றங்களைத் தவிர்த்த இனிய வாழ்வை அளிக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment